Sunday, November 15, 2009

நிமிண்டாம்பழம் .............

இது ஒரு non-seasonal பழம். சுப்பு வாத்தியாரிடம் மட்டுமே கிடைக்கும். வேலூர் காவேரி ரோட்டில் உள்ள சத்திரத்தில் குடி இருந்த சுப்பு வாத்தியார்...எனது பள்ளி/வகுப்புத்தோழன் முரளிகிருஷ்ணனின் தாத்தா......
ஒல்லியான தேகம். நல்ல உயரம். அக்கிரகாரத்துக்கு அவர்தான் கணக்கு வாத்தியார். கல் சிலேட்டை எடுத்துக்கொண்டு கணக்கு கற்றுக்கொள்ள அவரிடம் செல்வதைத்தவிர வேறு வழியில்லை. வாய்ப்பாடு ( இன்று பள்ளிக்குழந்தைகளுக்கு இது பற்றி தெரிய வாய்ப்பில்லை) அவரிடம் கற்றுக்கொண்டது பெரும்பாடு. பதினாறாம் வாய்ப்பாடுவரை ஒப்பிக்க வேண்டும். தடங்கல் வரக்கூடாது. யோசிக்கக்கூடாது. இல்லையென்றால் நிமிண்டாம்பழம் தான் பரிசு... தொடையில் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்துப்பிடித்து நிமிண்ட , இரத்தம் கன்னிப்போய் ,தோல் சிவந்து , அந்த வலியில் வாய்ப்பாடு தானாக வாய் வழிந்தோடும்..
நிமிண்டாம்பழங்கள் இன்று இல்லை. ஆசிரியர்கள் மாணவர்களை கடிந்து கொண்டாலே , அவர்களின் வேலைக்கு உத்திரவாதம் இல்லை. நீதி மன்றங்கள் மாணவர்களை கண்டிக்கும் ஆசிரியர்களைத் தண்டிக்க தயாராக உள்ளன. காசுக்கு கல்வி என்று மாசுபட்ட பிறகு இந்த நிலை மாறுமா?

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...