நிமிண்டாம்பழம் .............
இது ஒரு non-seasonal பழம். சுப்பு வாத்தியாரிடம் மட்டுமே கிடைக்கும். வேலூர் காவேரி ரோட்டில் உள்ள சத்திரத்தில் குடி இருந்த சுப்பு வாத்தியார்...எனது பள்ளி/வகுப்புத்தோழன் முரளிகிருஷ்ணனின் தாத்தா......
ஒல்லியான தேகம். நல்ல உயரம். அக்கிரகாரத்துக்கு அவர்தான் கணக்கு வாத்தியார். கல் சிலேட்டை எடுத்துக்கொண்டு கணக்கு கற்றுக்கொள்ள அவரிடம் செல்வதைத்தவிர வேறு வழியில்லை. வாய்ப்பாடு ( இன்று பள்ளிக்குழந்தைகளுக்கு இது பற்றி தெரிய வாய்ப்பில்லை) அவரிடம் கற்றுக்கொண்டது பெரும்பாடு. பதினாறாம் வாய்ப்பாடுவரை ஒப்பிக்க வேண்டும். தடங்கல் வரக்கூடாது. யோசிக்கக்கூடாது. இல்லையென்றால் நிமிண்டாம்பழம் தான் பரிசு... தொடையில் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்துப்பிடித்து நிமிண்ட , இரத்தம் கன்னிப்போய் ,தோல் சிவந்து , அந்த வலியில் வாய்ப்பாடு தானாக வாய் வழிந்தோடும்..
நிமிண்டாம்பழங்கள் இன்று இல்லை. ஆசிரியர்கள் மாணவர்களை கடிந்து கொண்டாலே , அவர்களின் வேலைக்கு உத்திரவாதம் இல்லை. நீதி மன்றங்கள் மாணவர்களை கண்டிக்கும் ஆசிரியர்களைத் தண்டிக்க தயாராக உள்ளன. காசுக்கு கல்வி என்று மாசுபட்ட பிறகு இந்த நிலை மாறுமா?
Showing posts with label நிமிண்டாம்பழம்.... Show all posts
Showing posts with label நிமிண்டாம்பழம்.... Show all posts
Sunday, November 15, 2009
Subscribe to:
Posts (Atom)
நான் கண்ட பொங்கல்!
பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...
-
எழுத்தாக்கம்: B.ரமாதேவி இனிய நண்பர்களே! ஸ்ரீமத்பகவத்கீதையை மொழிபெயர்த்து முடித்த பின்னர், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது, ஆதி...
-
ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் முப்பத்த...