கீதா சொல்லிய அந்த குண்டு நோட்டு பொள்ளாச்சி மாமாவால் கொடுக்கப்பட்டது. நாங்கள் (நானும் கீதாவும்) அப்பாவும் அம்மாவும் traning சென்ற பொழுது மாமா (பொள்ளாச்சி PAP காலனியில் சுமார் மூன்று மாதங்கள் இருக்க வாய்ப்பு கிடைத்தது. பொள்ளாச்சியில் நாங்கள் எழுதி படிப்பதற்காக மாமாவால் அவர்கள் அலுவலகத்திலிருந்து எடுத்து வந்து கொடுக்கப்பட்ட நோட்டு. சுமார் 500 பக்கங்களுக்கு மேல் இருக்கும். பெரிய அக்கா ரமா shorthand எழுதி பழகிய நோட்டு. பிறகு கீதாவாலும் என்னாலும் ஹிந்தி முதலான பாடங்கள் எழுத இடம் கொடுத்த நோட்டு. கோலங்களால் நிரம்பிய நோட்டுக்கு ஒவ்வொரு மார்கழி மாதமும் பயங்கர demand தான். கோலங்களுக்கு விடை கொடுத்த பிறகு அந்த நோட்டை இப்போது தேடிப்பிடிக்க வேண்டும்.
என் தாத்தாவுடன் நாங்கள் பழகியது பொள்ளாச்சியில் நாங்கள் இருந்த அந்த மூன்று மாதங்களில் தான். தன் டிரங்கு பெட்டியில் வைத்து பூட்டியிருக்கும் நெஸ்காப்பியை தினம் பகல் மூன்று அல்லது நான்கு மணிக்கு எடுத்து பாலில் கலந்து குடிக்குக்போது எனக்கும் அதில் பங்கு கொஞ்சம் கிடைக்கும். தினமும் பாட்டில் வைத்து மரத்தூளில் வெந்நீர் அடுப்பு தயார் செய்யும் லாகவமான வேலையை பார்ப்பது ஆச்சர்யமான விஷயம். தாத்தாவுக்கு தினமும் இட்லி வேண்டும். மாமா வீட்டில் தினசரி மாவாட்டும் வேலை தவறாமல் நடக்கும். அத்தை செய்யும் சாம்பார் மிக ருசியாக இருக்கும்.
தொடர்வேன்....