Monday, January 17, 2011

மாட்டுப்பொங்கல்:

நேற்று மாட்டுப்பொங்கல்!


மாட்டுப்பொங்கலுக்கு நினைவு வருவது வேலூர் (பரமத்தி) தான் !

அக்ராஹாரத்து கோமள விலாசத்து திண்ணைகளில்

அமர்ந்து கொண்டு பார்த்த காட்சிகள்

இன்றும் பசுமையாக உள்ளன:

மனதில் வரைந்த சிறு எழுத்தோவியம் :

மாட்டுப்பொங்கல்:

காலையில் எப்பவும் போல்

காவிரிக்குச் செல்லும் வண்டிமாடுகளின்

வரிசை தெருவை நிறைக்கும்.

திரும்புகையில்-

மணல் மறந்த வண்டிகளை - நம்பாது

இழுத்து வரும் சுகம் காட்டும்

முகத்தில்- குங்குமமும் மஞ்சளும்!

பாலின் நிறமொத்த தோலில்

வண்ணப்புள்ளிக் கோலங்கள்!

கொம்புகளில் அரசியல் கட்சிக்கொடிகளின்

புதுச்சாயத்தீற்றல்கள் !

நுகத்தடியில் புது மூக்கணாங் கயிற்றுடன்

ஜல் ஜல் எனத்தலையாட்டி வருகையிலே-

அவற்றிற்குத் தெரிந்திருக்குமா -

இன்று மட்டும் இந்த சுதந்திரம் என்று?

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...