Saturday, December 5, 2009

இதோ இது வேலுரின் வாழைத்தோப்புக்களை விழுங்கிய நான்கு வழிச் சாலை.
புதிய பாலத்திலிருந்து வேலுருள் நுழையாமல் நேரே பரமத்தி செல்லும் சாலை. ஆனால் இந்த சாலை காலி செய்த சோலையின் மாதிரிதான் நீங்கள் கீழே இன்னொரு படத்தில் பார்ப்பது.
காவிரிக்கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில். என் நினைவில் தெரிந்த நாள் முதல் தன் நிலை மாறாது இருக்கும் கோயில். எவ்வளவோ புதிய கோயில்கள் வேலுருக்குள் வந்திருந்தாலும் காசி விஸ்வநாதர் அப்படியே இருக்கிறார்.

வாழைத்தோப்பின் அழகைப்பாருங்கள். தென்னையும் வாழையும் செழித்த வேலூர். தாவி ஓடிய (இறந்த காலம் தான்) காவிரியின் கரையில் செழித்து வளர்ந்த இந்த பசுமை இன்னும் எத்தனை நாட்களுக்கு தாங்கும் என்பது கேள்விக்குறிதான்.

தொடர்வேன்...

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...