Saturday, November 7, 2009

எனது நினைவுகளை தொடர முயல்கிறேன் ....

விடுமுறை நாட்களின் மதியங்களில் வாய்க்காலில் குளித்துவிட்டு கண்கள் சிவக்க வீட்டிற்கு வந்து அப்பாவிடம் வாங்கிய அடிகள்........நீரில் மிதந்து வரும் நுங்குகளை மறைத்து வீட்டிற்கு எடுத்து வந்து சாப்பிட்டது .....


சாமிநாத டாக்டர் வீட்டு கண்ணன் ஒரு பைசா தாமிர காசை எதோ இரசாயனத்தில் அமிழ்த்தி அதை வெள்ளிக்காசாக மாற்றி வித்தை காட்டியது ...

அய்யர் வீட்டு பட்டி சுவர்களின் ஓட்டைகளில் வெடி வைத்து மகிழ்ந்தது..

தேங்காய் சுட்ட குச்சிகளை வைத்து தெருவில் விளையாடியது ...

பம்பரம் விட்டது, கோலி விளையாடியது... ( என் குழந்தைகள் இவற்றில் ஒன்றைக்கூட அனுபவித்ததில்லை என்பது மிகவும் வேதனையான உண்மை..)

கூரை வீட்டு வாசலில் கயிற்றுக்கட்டிலில் படுத்து வானத்தில் நட்சத்திரங்களை எண்ணியது...

தீபாவளிக்கு மணி ஐயர் வீட்டிற்கு வந்து பலகாரங்கள் தயார் செய்தது... (மணி ஐயர் செய்து கொடுத்த மரத்தாலான ஸ்டாண்ட் இன்றும் பூஜை அறையில் சீதா ராம லக்ஷ்மணர்களை தாங்கி நின்று கொண்டிருக்கின்றது..

என்னுடைய எண்ணங்களை தொடராக எழுதுவதை விட இது மாதிரி சிறு சிறு துளிகளாக எழுதுவது (like falshes!) நன்றாக இருக்கும் என்றே இப்படி எழுதுகிறேன்...

தொடர்வேன்...

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...