Friday, November 13, 2009

ரமாவுக்கு நான் எழுதிய கடிதம் எனது மகன் ஹரியை மிகவும் பாதித்துவிட்டது.
குழந்தைப்பருவ அனுபவ இழப்புக்கள் அவனை கண்ணீர் சிந்த வைத்துள்ளது. வேலூர் கந்தசாமி கண்டர் துவக்கப்பள்ளியில் நான் பெற்ற கல்வி எனது குழந்தைகள் அவர்களது LKG முதலான படிப்புக்களில் பெற்றார்களா என்பது சந்தேகமே. கல்வியின் நோக்கம் காலப்போக்கில் மாறி விட்டதுதான் காரணமாக இருக்க முடியும். பெற்றோர்கள் தமது குழந்தைகள் கல்லுரியிலிருந்து வெளி வரும்போது நல்ல வேலையுடன் வருவதையே விரும்புகிறார்கள். இன்னும் நகரங்களில் குழந்தைகள் படிப்புடன் வேறு கலைகள் பயில்வது கூட அவர்களில் மகிழ்ச்சிக்காக என்பதும் சந்தேகமே... நான் ஆகாயத்தைப்பார்த்து ரசித்த அளவு எனது குழந்தைகள் ரசித்திருப்பர்களா? வீடு, படி இறங்கும்போதே ஆட்டோ அல்லது பள்ளி வாகனம் , பள்ளியில் மீண்டும் அந்த நான்கு சுவர்கள், .. மாலையில் மீண்டும் அதே கதை.. வானத்தப்பார்க்க ஏது நேரம்?

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...