மீண்டும் தொடர்கிறேன்...வேலுரின் கூரை வீட்டு வாழ்க்கை என்றுமே என் நினைவை விட்டு அகல வாய்ப்பில்லை. அப்பா பாகல்பூர் சென்று M.A ஹிந்தி படித்த நாட்களில் அம்மா தனியே எங்கள் மூவரையம் (ரமா , கீதா, நான் ) கவனித்துக்கொண்டது , சற்றும் மிகைப்படுத்த முடியாத துணிச்சலான செயல்.
அப்பா காசியிலிருந்து வங்கிவந்த மரத்தாலான BAND வாத்தியக்குழு இன்றும் என்னிடம் உள்ளது. எங்கள் வீட்டிற்கு வந்தது முதல் ஒவ்வொரு நவராத்திரியிலும் கொலுவை அலங்கரித்து அவை பேண்ட்(band) வாசிக்க தவறியதில்லை.
வேலூர் சக்தி ஸ்டுடியோவில் அப்பா அம்மாவுடன் நாங்கள் group போட்டோ எடுத்துக்கொள்ளும் பொழுது அப்பா, அம்மா , பெரிய அக்கா ரமா நாற்காலியில் அமர, என்னையும், கீதாவையும் நிற்க வைத்ததற்காக நாங்கள் முகத்தைத்தூக்கி வைத்துக்கொண்டிருப்பதை இன்றும் அந்த புகைப்படத்தில் காணலாம்.
பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்ட காலம் அது என்று என் பெற்றோர் வாயிலாக பிற்காலத்தில் நான் கேள்விப்பட்டாலும் , நாங்கள் அதை சற்றும் உணராமல் எங்களை வளர்த்ததை இன்று நினைத்தாலும் என் பெற்றோர்களின் மனோதிடம் அவர்களின் உயரத்தை அளவிட்டு காட்டுகிறது.
தவணை முறையில் சிங்கரமுதளியார் ஜவுளிக்கடையில் துணி எடுத்துதான் ஒவ்வொரு தீபாவளியும் கொண்டாடப்பட்டது. . சாமியப்பா முதலியார் மளிகை கடை தான் எங்களுக்கு சோறு போட்டது. மளிகைக் கடையில் சாமான் வாங்கி வருவதே ஒரு தனி அனுபவம். இனாமாக கிடைக்கும் பொட்டுக்கடலை அவ்வளவு ருசி.
தொடர்வேன்...
அப்பா காசியிலிருந்து வங்கிவந்த மரத்தாலான BAND வாத்தியக்குழு இன்றும் என்னிடம் உள்ளது. எங்கள் வீட்டிற்கு வந்தது முதல் ஒவ்வொரு நவராத்திரியிலும் கொலுவை அலங்கரித்து அவை பேண்ட்(band) வாசிக்க தவறியதில்லை.
வேலூர் சக்தி ஸ்டுடியோவில் அப்பா அம்மாவுடன் நாங்கள் group போட்டோ எடுத்துக்கொள்ளும் பொழுது அப்பா, அம்மா , பெரிய அக்கா ரமா நாற்காலியில் அமர, என்னையும், கீதாவையும் நிற்க வைத்ததற்காக நாங்கள் முகத்தைத்தூக்கி வைத்துக்கொண்டிருப்பதை இன்றும் அந்த புகைப்படத்தில் காணலாம்.
பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்ட காலம் அது என்று என் பெற்றோர் வாயிலாக பிற்காலத்தில் நான் கேள்விப்பட்டாலும் , நாங்கள் அதை சற்றும் உணராமல் எங்களை வளர்த்ததை இன்று நினைத்தாலும் என் பெற்றோர்களின் மனோதிடம் அவர்களின் உயரத்தை அளவிட்டு காட்டுகிறது.
தவணை முறையில் சிங்கரமுதளியார் ஜவுளிக்கடையில் துணி எடுத்துதான் ஒவ்வொரு தீபாவளியும் கொண்டாடப்பட்டது. . சாமியப்பா முதலியார் மளிகை கடை தான் எங்களுக்கு சோறு போட்டது. மளிகைக் கடையில் சாமான் வாங்கி வருவதே ஒரு தனி அனுபவம். இனாமாக கிடைக்கும் பொட்டுக்கடலை அவ்வளவு ருசி.
தொடர்வேன்...
No comments:
Post a Comment