Friday, November 6, 2009

அன்புள்ள ரமாவிற்கு
தீபாவளி நாளை நினைவு கூர்ந்து எழுதியவை என் மனதை விட்டும் என்றும் நீங்காதவை ஆகும். கூரை வீட்டு வாழ்க்கையை எப்படி மறக்க முடியும்?
ஐம்பத்தொன்று வருடங்களுக்கு பிறகு அம்மவைப்பிரிந்த இந்த தீபாவளி! என்னுள்ளும் பழைய நினைவுகள் ....................வெள்ளிக்கூஜாவில் சேமியாப்பாயசம் அதிகாலை ஐந்து மணிக்கு சாப்பிட்டது நிஜம் . ஆனந்தா லொட்ஜ் வீட்டு சந்தானமும் கோபுவும் வைக்கும் ராக்கெட் வெடிக்கு பயந்து அப்பா ஒவ்வொரு முறையும் டென்ஷன் ஆனது நிஜம். ஒருமுறை கூரையில் தீப்பிடித்ததும் நிஜம். வாசல் திண்ணையில் தட்டி கட்டி உறங்கியதும் நிஜம். அதே திண்ணையில் ஸ்ரீராமநவமி அப்பா கொண்டாடியதும் நிஜம். கூரை வீட்டின் அந்த சின்ன அறையில் இருந்த ரேடியோவில் ஒவ்வொரு சண்டேயும் மூன்று மணிக்கு தெருவே கூடி திருச்சி வானொலியில் ஒலிச்சித்திரம் கேட்டதுவும் நிஜம். மழைக்காலத்தில் தேளும் பூரானும் கூரையில் இருந்து கீழே விழுந்து ஓடியதும் நிஜம். அந்த கருப்பு போர்வைக்கு நான் மட்டும் சொந்தம் கொண்டாடியதும் நிஜம்.
அந்த கூரை வீடு.....
ஒவ்வொரு ந்ஜாயிற்று கிழமையும் சந்தைக்கு சென்று வரும் அப்பா சிமெண்ட் தரையில் சாக்பிசினால் செலவுக்கணக்கு பார்த்தது ...........
கட்டித்தயிர் (எனக்காக) கொண்டு வரும் மொர்க்கார நல்லம்மா ....
சுவர்களையும் தரையையும் ரிப்பேர் செய்ய வரும் அந்த மொபைல் மேஸ்தரி!(சைக்கிளில் வருவார்-அதனால் தான்) .......
தலையில் கூடையில் எவர்சில்வர் பத்திரங்களை சுமந்து வந்து மாத தவணையில் விற்பனை செய்த அந்த பாத்திர வியாபாரி!
பள்ளிக்கு கொண்டு செல்ல அப்பா வாங்கிக்கொடுத்த அந்த மஞ்சள் கலர் அலுமினிய டிபன் பாக்ஸ்!
துணியில் மூட்டை கட்டிக்கொண்டு வந்து விற்பனை செய்து வாசல் திண்ணையில் படுத்து உறங்கி சென்ற புடவை வியாபாரி!
வீட்டின் பின்புறம் இருந்த கறிவேப்பிலை மரம்!
பக்கத்து வீட்டில் இருந்த மின் வாரியத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ராமநாதன் மாமா !
எதிர்த்த வீட்டில் இருந்த கணேசன் (பாவி! நாங்கள் ஒரு சமயம் திருப்பதி சென்றிருந்த சமயத்தில் ஆறு நாட்டான் மலையில் இருந்து கீழே விழுந்து
இறந்து விட்டிருந்தான்! ) அவனுடன் சாமி பொம்மைகளை வைத்து விளையாடியதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை...
கூரை வீட்டிற்கும் அவ்வப்பொழுது கூரை மாற்றும் கிழக்கு தெரு கணபதி!
அக்ரகாரத்து தெரு வழியே வேட்டியை கையில் பிடித்தபடி தன் தோட்டத்திற்கு நடந்து சென்று வரும் அப்பையர் !
தெருவின் கடைசியில் ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால் ! வாளியில் மொண்டு வந்து வீட்டில் நிரப்பிய தண்ணீர்!
............தொடர்வேன்!

2 comments:

guru said...

super chithappa
please continue

geethasrinivasan said...

yes. the great deepavali we used to celebrate. do u remember when appa was doing his Bed in Pudukkotai he bought pattasu for 40 rupees full of ur aluminiyam petti.for the firth time apa bought saravedi.oosipattasu. i am still afraid of that rocket even though my husband is fond of that .Iused run away or i shout at him.

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...