

பாட்டீச்வரம் செல்லும் சாலை பிரியும் இடத்தில் இந்த குளம் அமைந்துள்ளது. சாலையில் வலது புறம் திரும்பி நல்லூர் நோக்கிச் சென்றோம்.
நல்லுரின் சிறப்பு:
கோயிலின் மூலவரான லிங்கம் பகலில் ஐந்து முறை நிறம் மாறும் அதிசியம் இங்கு நிலவுகிறது.
மணி ஆறை நெருங்கிகொண்டிருந்ததால் அவசர அவசரமாக சன்னதியை அடைந்தோம். படிகளில் ஏறி செல்லவேண்டி இருந்தது. கோயிலில் எங்களைத்தவிர இன்னும் சிலர் இருந்தனர். நாங்கள் பார்க்கும் பொழுது லிங்கம் தாமிர கவசம் அணிந்தது போல் தோற்றம் அளித்தது. அது கவசம் இல்லை, லிங்கமே அவ்வாறு உள்ளது என்று கோயில் குருக்கள் சொன்னார். மின்சாரம் வேறு இல்லாததால் மிக இருட்டாக இருந்தது.
மூலவர் பெயர் கல்யாண சுந்தரேஸ்வரர். அம்மன் பெயர் கிரி சுந்தரி. மாசி மகம் இத்தளத்தில் மிகவும் விசேஷம் என்று சொன்னார்கள். கோயில் முன் இருக்கும் திருக்குளத்தில் ஏழு கடல்கள் சங்கமிப்பதாக ஐதீகம் என்றும் சொன்னார்கள். கோயிலின் சில காட்சிகள்:
கோயிலின் மரத்தாலான கதவுகளில் நல்ல வேலைப்பாடுகள். இருட்டில் சரியாகத் தெரியவில்லை. சில காட்சிகள்;
அடுத்து பட்டீஸ்வரத்தில் சந்திப்போம்.......










No comments:
Post a Comment